Wednesday, May 4, 2011

கவிதைத் துளிகள்...

நட்பின் முதல் வரி
என்னை நீ முதன்முதல் அழைத்தது..
உன் பார்வையில் என் நட்பு
தாழ்ந்திருக்கலாம் ஆனால்
வீழ்ந்திருக்காது...


உன் அழகைப் பற்றிப் பேச
நான் அழகானவனுமில்லை...
அழகும் அழகுமில்லை...
உன் குணத்தைப் பற்றிப் பேசவா...
கோபக்காரி,...கொடுமைக்காரி,
ஆனாலும் அதுதான் உன் அழகு...

வானிலாவும் வந்திங்கு வணங்கும்
கதிரோனும் கட்டுண்டு விடுவான்
புயலும் புன்னகைக்கும்
இடியும் இனிதாகும்
ஆழிப்பெருக்கும் அன்பு ஊற்றெடுக்கும்...
இத்தனைக்கும் மேலாய்
இறையும் இரைஞ்சும்
இனியவென் நட்பிற்கு...
உணராது போனாயே நீ.........


நட்பைப் புரிந்து கொள்ள
நட்பாய் மட்டும் நடக்க முயற்சிக்காதீர்...
நம்பியும் நடக்க முயற்சியுங்கள்.
 

No comments:

Post a Comment