Wednesday, May 4, 2011

நட்பின் முகவரிக்கு ஒரு கடிதம்...

இதயம் கனத்தொரு கணம்
கண்ணும் நீர் சொரிகிறது
உள்ளிருந்து ஒரு சொல் தாளாது
வெளிவந்தும்
கேளாது எச் செவியுமெனவே
தேம்பியேவிட்டது...


எனக்கும் உனக்கும் இடையில்
உள்ள நட்பில்
வலியது உன் கோபமென அறிந்தும்
மீண்டும் முயற்சித்து வீண்போகிறது என் மனது...


உன் புன்னகை என் நட்புத் தோட்டத்தில்
பூத்திடும் நாளும் வரும்...
உன் சொற்கள் என் நட்பேட்டில்
பதிந்திடும் நாளும் வரும்...

உன் நட்பிற்காய் என் கண்கள்
அழுது ஓய்ந்த பின்
உன் கண்களும் அழுதிடும்...
அப்பொழுது ஆறுதலாய்
உன் கண்ணீர் துடைக்கும் என் நட்பு.

No comments:

Post a Comment